சென்னை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க சம்வேதனா என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் பயன்பாட்டிற்கு வரும். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதவிகள் வழங்கப்பட்டது.