சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல்- திருவனந்தபுரம்- சென்ட்ரல் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் (02623, 02624) 27ம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், ஆவடி, காட்பாடி, கோவை, கொல்லம் வழியாக மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும், திருவனந்தபுரத்தில் இருந்து 28ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். சென்ட்ரல்- மங்களூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் ( 02601, 02624) 28ம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்ைட, சேலம், ஈரோடு வழியாக மங்களூர்க்கு மறுநாள் பிற்பகல் 12.10 மணிக்கு சென்றடையும்.