தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடித்து வைப்பு

சென்னை: கடந்த 14ம் தேதி முதல் துவக்கப்பட்ட 9வது கூட்டத்தொடரை முடித்து வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முடித்து வைப்பதாக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “14.9.20ம் தேதி துவக்கப்பட்ட ஒன்பதாவது கூட்டத்தொடரை (பதினைந்தாவது சட்டமன்ற பேரவை) தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்திய அரசமைப்பு பிரிவு 174 (2)(ஏ)ன் கீழ், 23.9.20 முதல் இறுதி செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Related Stories: