போட்டோ கிராபர் கொலையில் 2 பேர் கைது: கள்ளத் தொடர்பால் நடந்தது அம்பலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் தினேஷ்(33). இவரது மனைவி அனிதா(26). கடந்த 3 மாதங்களுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டூடியோவில் இருந்த தினேஷை, அங்கு வந்த 4 பேர், சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வேறு பெண்ணுடன், தினேஷுக்கு தொடர்ந்து இருந்துள்ளது. இதனால், அவரை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், சந்தேகத்தின் பேரில் 2 பேரை கைது செய்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: