துபாய்: ஐபிஎல் 2020 டி20 5-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு 207 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் 6-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் எடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.