அரகோணம்: அரகோணத்தில் விண்டர்பேடையில் ராஜ்குமார் என்ற இளைஞரை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இளைஞர் ராஜ்குமாரை 5 பேர் கொண்ட கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரக்கோணத்தில் நேற்று இளைஞர் ஒருவரை ஓடஓட வெட்டி கொன்ற நிலையில் இன்று ஒருவரை கொல்ல முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.