×

சென்னை அருகே குடும்ப தகராறில் விபரீதம்! .. 2 குழந்தைகளை கொலை செய்த தந்தை 5 ஆண்டுகளுக்கு பின் கைது!!!

சென்னை: சென்னை அடுத்த மதுரவாயலில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று விட்டு 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரவாயலை அடுத்த எம்.ஜி.ஏ. காலனியை சேர்ந்தவர் ரவி. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ரவியின் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், விசாரணையில் அவர் 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரவி தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்து சென்றதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரவியின் நடமாட்டத்தை செல்போன் சிக்கனல்கள் மூலம் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சென்னையை அடுத்த மண்ணடியில் பதுங்கி இருந்த ரவியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், மனைவியை பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வந்த ரவி குழந்தைகளை பராமரிக்க முடியாமல் போதிய வருமானம் இல்லாததால் 2 குழந்தைகளையும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Tags : family dispute ,Chennai ,children , Chennai, tragedy, 2 children, murder, arrest
× RELATED கவுன்சலிங் ரூம்