புதுச்சேரி: புதுச்சேரியில் பதுக்கி வைத்திருந்த 74 சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரியில் ராஜரத்தினம் என்பவரது வீட்டில் பழமையான 74 சிலைகள் பதுக்கிருப்பதாக தகவல் கிடைத்தது. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் எஸ்.பி.சக்திவேல் தலைமையில் சென்ற போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.