பஞ்சாப்: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிஷான் மஜ்தூர் சங்கரஷ் சார்பில் அமிர்தசரசில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் செப்டம்பர் 26 வரை விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.