புழல்: முதியவரை, மர்மநபர் கல்லால் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றார். காயமடைந்து மயங்கி கிடந்த அவரை போலீசார் மீட்டனர். செங்குன்றம் மார்க்கெட் ஜிஎன்டி சாலை அருகில் நேற்று காலை 7 மணிக்கு பெயர், முகவரி தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் விழுந்து கிடந்தார். அவரது வலது தாடையில் காயம் ஏற்பட்டு, குடிபோதையில் இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, அதன் மூலம், மயங்கி கிடந்தவரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.