முதல்வர் வேட்பாளர் யார்? வால்கள் ஆடக்கூடாது: அதிமுக தலைவர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி

நெல்லை:  பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லையைச் சேர்ந்த மகாராஜன் என்ற 11ம் வகுப்பு மாணவர் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை மாதிரியாக வைத்து 170 ஓவியங்கள் வரைந்துள்ளார். இதற்கான ஓவிய கண்காட்சியை நெல்லை கிழக்கு பாஜ அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.  பின்னர் அவர் அளித்த பேட்டி:  குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதில் எந்தத் தவறும் இல்லை. தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்.

வரும் தேர்தலில் பாஜ அங்கம் வகிக்கும் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூட்டணி அமைந்த பிறகு தான் முடிவு செய்வோம். கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக பாஜ வெற்றி பெறும். கூட்டணியில் வால்கள் ஆடுவதை கணக்கில் கொள்ளக்கூடாது. வாய் என்ன பேசுகிறது, தலைமை முடிவு தான் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: