நெல்லை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லையைச் சேர்ந்த மகாராஜன் என்ற 11ம் வகுப்பு மாணவர் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை மாதிரியாக வைத்து 170 ஓவியங்கள் வரைந்துள்ளார். இதற்கான ஓவிய கண்காட்சியை நெல்லை கிழக்கு பாஜ அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதில் எந்தத் தவறும் இல்லை. தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்.