சென்னை: தமிழகத்தில் மேலும் 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,57,999-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,02,740 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,363 பேர் குணமடைந்துள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9010-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 980 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 158594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 67,25,037 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 84,979 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 177 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,36,469 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,282 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,21,500 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,043 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;* பீகார் - 2* ஆந்திரா - 2* கர்நாடகா -1* கேரளா-1