சென்னை: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது என பிரதமருடனான காணொலி ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.