திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 2,591 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 42,786 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.