சென்னை: முறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும் என திமுக தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனாவையும் வைத்து முறைகேடு செய்த ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், மாநில உரிமைகளுக்கு எதிரானவை என்ற அடிப்படையில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது; இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே!? எடப்பாடி அரசு - அது மாநில உரிமைகளைப் பற்றிய உணர்ச்சியே இல்லாத அரசு எனவும் கூறியுள்ளார்.