கொரோனாவின் நிலவரம் என்ன?: தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!!!

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட 7 மாநில  முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா  வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு  அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா  உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

அதேநேரம், கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இன்று காலை நிலவரப்படி, சுமார் 56,46,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் 90,020 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த  இடத்தில் நோய் பாதிப்பு இந்தியாவில்தான் அதிகம்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி,  டெல்லியில் இருந்தப்படி, வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி மற்றும்  டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநில முதல்வர்களுடன்   ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும்  கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது  குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு மத்திய  அரசு இன்னும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைக்க  திட்டமிட்டுள்ளார்.

Related Stories: