இந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ரத்து செய்துள்ளது சவுதி அரேபியா: பிரேசில், அர்ஜெண்டினா சேவையும் ரத்து

ரியாத்: கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் வரும் அனைத்து விமானங்களையும் சவுதி அரேபியா நிறுத்தி உள்ளது. கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்று வந்தவர்களையும் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (ஜிஏசிஏ) இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவைத் தவிர, பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவுக்குச் செல்லும் விமானப் பயணங்களும் சவுதி அரேபியாவால் நிறுத்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையத்தின் அதிகார பூர்வ அறிக்கையில், சவூதி அரேபியா இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தியுள்ளது என கூறப்பட்டூள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் விதிகளின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் பயணத்திற்கு 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையின் அசல் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 3 வரை ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடை செய்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 56,46,010 ஐ எட்டியுள்ளது எனவும் மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories: