ரியாத்: கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் வரும் அனைத்து விமானங்களையும் சவுதி அரேபியா நிறுத்தி உள்ளது. கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்று வந்தவர்களையும் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (ஜிஏசிஏ) இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவைத் தவிர, பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவுக்குச் செல்லும் விமானப் பயணங்களும் சவுதி அரேபியாவால் நிறுத்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையத்தின் அதிகார பூர்வ அறிக்கையில், சவூதி அரேபியா இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தியுள்ளது என கூறப்பட்டூள்ளது.