×

பிரதமர், முதல்வர் குறித்து அவதூறு: டிராபிக் ராமசாமி மீது வழக்கு

மார்த்தாண்டம்: சென்னையை சேர்ந்தவர் டிராபிக்ராமசாமி. சமூக ஆர்வலர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தேச துரோகி என்றும், காவி வேட்டி கட்டி ஊரை ஏமாற்றுவதாகவும் பேசியதாக பாஜவை சேர்ந்த சுரேஷ் போலீசில் புகார் அளித்தார். அதன்படி டிராபிக் ராமசாமி உள்பட 25 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Tags : Chief Minister ,Tropic Ramasamy , Defamation case against Prime Minister and Chief Minister Tropic Ramasamy
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...