டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபேஸ்புக் அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்மனுக்கு எதிரான வழக்கில் டெல்லி சட்டமன்ற குழு செயலருக்கு சம்மன் அனுப்பி, இது குறித்து விளக்கம் தர உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.