மதுரை: மதுரையில் வீட்டுவசதி வாரிய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற கோரி கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதில் தர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கிருதுமால் நதி ஓடும் பகுதியையும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.