தென்காசி: குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆக்ரோசமாக கொட்டுகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலத்தில் சரிவர சாரல் மழை பெய்யவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஓரளவு சாரல் பெய்தது. ஆனால் தற்போது சீசன் காலம் நிறைவடைந்து செப்டம்பர் மாதத்திலும் நன்றாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் அவ்வளவாக இல்லை. பகல் மற்றும் இரவு வேளைகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகலிலும் வெயில் இல்லை. வானம் எப்பொழுதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான காற்று வீசியது.