×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1184 குறைந்து ரூ.38,480-க்கு விற்பனை : இல்லத்தரசிகள் உற்சாகம் !!!

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 520 குறைந்த நிலையில் இன்றும் பவுனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. தங்கம் விலை கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் விலை 43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமான போக்கு காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் 39,664க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை குறைந்தது.  ஒரு கிராம் 4,915க்கும், சவரன் 39,320க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 65 குறைந்து ஒரு கிராம் 4,850க்கும், சவரனுக்கு 520 குறைந்து ஒரு சவரன் 38,800க்கு விற்கப்பட்டது.3வது நாளான இன்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ.4,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.40 காசு குறைந்து ரூ 62.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களில் மட்டும் சவரன் 1184 அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு சந்தோஷத்தை ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது நகை வாங்குவோருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags : Chennai ,Housewives , BJP , Chairman, Murugan Violation, Prosecution...
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...