சென்னை : சசிகலா இணைப்பு குறித்து எனக்கு தெரியாது என்றும் அதிமுகவில் தான் ஒரு சாதாரண தொண்டன் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமோ, சூழலோ தற்போது இல்லை என்றும் அவர் கூறினார்.