×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,52,674-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,947-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,97,377- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,350- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, 5,337 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...