×

ஜி.எஸ்.டி. நிலுவை ரூ.12,250 கோடியை மத்திய அரசு உடனே வழங்கவேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தமிழ்நாட்டிற்குமத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை ரூ.12,250 கோடியை உடனே வழங்கவேண்டும் வலியுறுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 9,000 கோடி செலவழித்த நிலையில் முதற்கட்டமாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை தர கேட்டுள்ளோம். இதுவரை இழப்பீடாக மத்திய அரசு ரூ.18.147 கோடி 14% அடிப்படையில் கொடுத்துள்ளது எனவும் கூறினார்.


Tags : G.S.T. ,government ,Minister Jayakumar , G.S.T. The central government should immediately pay the outstanding Rs 12,250 crore: Minister Jayakumar
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...