மதுரை: தமிழக விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். வேளாண் மசோதவை எதிர்த்து பேசியது பற்றி எஸ்.ஆர்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும் என கூறினார். வேளாண் ஒப்பந்தங்களால் விவசாயிகளுக்கு நலன் கிடைக்கும் என கூறினார். விவசாயிகளுக்கு பலன் தரும் என்பதால் தான் சட்டத்துக்கு அதிமுக அரசு ஆதரவு அளித்தது எனவும் கூறினார்.