டெல்லி: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக யுவராஜூக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆணவக்கொலைகளா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியந்துள்ளனர். ஹரியானா, உ.பி.யில் தான் ஆணவக் கொலை நடப்பதாக கேள்விபட்டோம் என வழக்கு விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.