×

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கொடுத்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் வாங்க மறுப்பு

டெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள 8 எம்.பி.க்களுக்காக மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கொடுத்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் வாங்க மறுத்து விட்டனர். மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 2வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Harivansh ,MPs ,State Council , Krishnagiri, mission, chief constable, casualty...
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசின்...