திருவனந்தபுரம்: வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக கேரளாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்றும் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையையொட்டி பல அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆறுகளிலும் ஆபத்தான அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஷோலயார், கல்லார்குட்டி, குண்டலா, பெரிங்கல்குத், லோயர் பெரியாறு, மூழியாறு, பாணாசுரா மற்றும் மங்கலம் அணைகளுக்கு ‘ரெட் அலர்ட்’ வழங்கப்பட்டுள்ளது.