சென்னை: கடற்படையின் முன்கள போராளிகள் பிரிவில் துணை லெப்டினண்ட்களாக நியமிக்கப்பட்டுள்ள குமுதினி, ரிதி சிங்கிற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் சவாலான உயரங்களை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள் என்பதை இருவரும் நிரூபித்துள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.