×

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: பியூஷ் கோயல் மக்களவையில் பதில்

டெல்லி: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் பதிலளித்துள்ளார். மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார். இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது. புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து. பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Piyush Goyal ,Lok Sabha , Construction of new railway line in Tamil Nadu has been suspended: Piyush Goyal's reply in the Lok Sabha
× RELATED கேரளா, கர்நாடக மாநிலங்களில் மக்களவை...