மதுரை: மதுரையின் குற்றாலம் என்று அழைக்கக்கூடிய குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சர்க்கரை முகமது என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.