டெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 288 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் கேள்வி எழுப்பினார். அபாயகரமான தொட்டிகளை சுத்தம் செய்ய வைக்கும் உரிமையாளர்களுக்கு 5 ஆண்டு சிறை விதிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஷவாயு தாக்கி பலியானோரின் விவரங்கள் இல்லை எனவும் கூறியுள்ளது.