சென்னை: பொருளாதார நிலையை மேம்படுத்த அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதார நிலையை மேம்படுத்த 24 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.