சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் செப். 30ம் தேதி வரை தூய்மை வாரம் கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ரயில்வே சார்பில் தூய்மை வாரம் செப்டம்பர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு அனைத்து சிறிய, பெரிய ரயில் நிலையங்களிலும் ஊழியர்களால் துவங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ரயில் நிலையம், தண்டவாளங்கள், ரயில்வே காலனி உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்துதல் மற்றும் சுத்தம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகும்.