திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை உடனடியாக வழங்கும்படி கேரள நீர்பாசனத்துறைக்கு தகவல் உரிமை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் தகவல் அறியும் உரிமை சட்ட கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பினு. வக்கீலாக உள்ளார். முல்லை ெபரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இவர் விண்ணப்பித்தார். ஆனால், பல மாதங்கள் கடந்தும் கேரள நீர்ப்பாசனத்துறையில் இருந்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.