சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக கடந்த 9ம் தேதி பிரபாகர் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது அறை அலுவலகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் வாஸ்து சாஸ்திரப்படி அந்த அறை அவருக்கு ராசியாக இருக்காது என்று ஜோதிட வல்லுனர்கள் 3 பேர் கொண்ட குழு கருத்து தெரிவித்தது. மேலும், அக்னி மூலையில் அமைந்துள்ள இடத்தில் அமர்ந்தால் அவருக்கு ராசியாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் தற்போதுள்ள அறையை மாற்றம் செய்ய முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.