அறநிலையத்துறையை ஆட்டி படைக்கும் வாஸ்து; ஆணைய கமிஷனர் அறை 2வது மாடிக்கு மாற்றம்: ஊழியர்கள் அதிருப்தி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக கடந்த 9ம் தேதி பிரபாகர் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது அறை அலுவலகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் வாஸ்து சாஸ்திரப்படி  அந்த அறை அவருக்கு ராசியாக இருக்காது என்று ஜோதிட வல்லுனர்கள் 3 பேர் கொண்ட குழு  கருத்து தெரிவித்தது. மேலும், அக்னி மூலையில் அமைந்துள்ள இடத்தில் அமர்ந்தால் அவருக்கு ராசியாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் தற்போதுள்ள அறையை மாற்றம் செய்ய முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

அதாவது, ஆணையர் அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் கூட்டரங்கு அருகே உள்ள ஓய்வறையில் அவரது அறை மாற்றப்படுகிறது. இதற்காக, அந்த ஓய்வறை ஆணையர் அறையாக மாற்றப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆணையருக்காக 2வது மாடியில் அறை அமைக்கப்படுவதால், அங்கு இருந்த கழிப்பறை மூடப்பட்டன. இதனால் அங்குள்ள ஊழியர்கள் தரை தளத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: