ஆவடி: அண்ணனூர் ஜோதி நகர் கோதாவரி தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (66). ஓய்வுபெற்ற தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் வாசுதேவன் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பூஜை செய்வதற்காக மா இலையை பறிக்க வீட்டில் இருந்து புறப்பட்டார். அண்ணனூர் ரயில்வே குடியிருப்பு மின்சார வாரிய அலுவலகம் அருகில் உள்ள மா மரத்தில் இலைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் வாசுதேவனிடம் தங்கச்சங்கிலி, பணத்தை கேட்டார்.