கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 13,000 கன அடியாக உள்ள நிலையில், பவானி ஆற்றில் 7,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.