ஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு: இதுவரை 86,752 பேர் பலி.!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 54.00 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 86 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 92,605 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,00,620 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,133 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 86,752 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 94,612 பேர் குணமடைந்துள்ளனர்;

.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 43,03,043 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,10,824 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 79.28% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.61% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.10% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 12,06,806 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 6,36,61,060 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories: