ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போவதாக அரச்சலூர் தலைமை காவலர் வாசுதேவன் எழுதிய கடிதம் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் திட்டியதால் மனமுடைந்து கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை விசாரணை மேற்கொண்டு வருகிறார்.