உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டக் குழு உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனன், வட்ட செயலாளர் பாஸ்கரன், வட்ட குழு பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் கொரோனாவால் வேலை இழந்துள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் ₹7500 வழங்க வேண்டும் என்பது உள்
பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.