காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் சென்னை - பொன்னேரிக்கரை பகுதியில் நடக்கும்ரயில்வே மேம்பால பணிகளை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் சென்னை - பொன்னேரிக்கரை பகுதியில் ₹50.78 கோடியில் மேம்பால பணி நடந்து வருகிறது. கடந்த 2017 மாதம்,அடிக்கல் நாட்டப்பட்டு, 66 தூண்களுடன் 70 தளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நெடுஞ்சாலை துறையினரால் ரயில்வே பகுதிக்கு அருகில் உள்ள இரு தளங்களை தவிர மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.