சென்னை: மணலி சாலை, கான்கார்டு பேருந்து நிறுத்தம் அருகே நின்ற லாரி ஓட்டுநர் அழகு முருகனிடம் கடந்த 9ம்தேதி 3 பேர் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர். அவர்களை பொதுமக்கள் பிடித்து திருவொற்றியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டதில் ஒருவன் சிறுவன். அவனிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்ததில், சிறுவன் ஆன்லைன் கல்விக்காக செல்போன் பறித்ததாக தெரிவித்துள்ளான்.