புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை சீன உளவுத்துறைக்கு கொடுத்து வந்த பத்திரிகையாளரும், அவருக்கு உடந்தையாக இருந்த சீன பெண்ணும், அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பகுதி நேர பத்திரிகையாளராக பணியாற்றி வருபவர் ராஜீவ் சர்மா. இவரிடம் சீன நாட்டு ெபண்ணும், நேபாளத்தை சேர்ந்த அவரது கூட்டாளியும், அணுகி இந்தியாவின் பாதுகாப்பு, ராணுவ ரகசியங்களை பற்றி சீன உளவுத்துறைக்கு கொடுத்தால் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டினர். இதற்கு மயங்கிய ராஜீவ் சர்மா, பத்திரிகையாளர் என்ற போர்வையை பயன்படுத்தி, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு சென்று ரகசியங்களை சேகரித்து, சீன உளவுத்துறைக்கு வழங்கி வந்தார்.