திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு டிக்கெட் இல்லாமல் வந்த பக்தர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் தமிழகத்தில் இருந்து அதிக அளவு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.