திருவனந்தபுரம்: கேரள சதுப்புநில காடுகளில் இதுவரை கண்டறியாத ஒரு புதிய வகையான நண்டுகள் வாழ்வது தெரிய வந்துள்ளது. இதற்கு, ‘லெப்டார்ம பிஜூ’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் லெப்டார்ம் எனும் பேரினம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை. கேரள பல்கலைக்கழக நீர்வாழ் உயிரியல் மற்றும் மீன்வளத்துறை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் போன்றவை இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் இந்த புதிய பேரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.