சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவுத்துறை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 32 ஆயிரத்துக்கும் மேலான ரேஷன் கடைகள் நடத்தி வருகிறது. இதில் 27,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் மற்றும் நியாய விலைக்கடைகளுக்கு ஏற்படும் ஏனைய செலவினங்களுக்கு ஆரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இதில் 2017-2018 ஆண்டு முடிய நிலுவை ஏதுமின்றி கடந்த ஆண்டு முழுமையான மானியம் அரசு வழங்கியதினால் கூட்டுறவு சங்கங்கள் புத்துயிர் பெற்றது. அதன்படி 2018-2019ம் ஆண்டிற்கு ரூ398 கோடியும், 2019-2020ம் ஆண்டிற்கு சுமார் ரூ380 கோடி மானியம் அரசு வழங்க வேண்டியுள்ளது.