ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 74 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8,218 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.உறுதி செய்யப்பட்டுள்ளது.  

மாநிலத்தில் இதுவரை 6 லட்சத்து 17 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. 81,763 பேர் தொடர்ந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 லட்சத்து 30 ஆயிரத்து 711 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5,302 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: