தூத்துக்குடி: நடிகர் சங்க பிரச்சனையில் இரு தரப்பையும் அழைத்து பேச அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திரைப்படத்துறையினர் வைக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து வருகிறோம் எனவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.